×

செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை

செங்கல்பட்டு: கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கிட தமிழக அரசு உத்தேசித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பெற்றோரின் உச்சகட்ட ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம்‌ கல்வி உதவித்தொகையாக வழங்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற 9 மற்றும் 10ம் வகுப்பில் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அல்லது அஞ்சல் வங்கிகளில் தமது பெயரில் வங்கிக்கணக்கு துவங்கி அதனை தமது ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும். மேற்படி, ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களை தமது வருமான சான்று மற்றும் சாதிச்சான்று நகல்களுடன் சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் மாணவியர்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறும் கேட்டு கொள்ளப்படுகிறது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Collector ,Rahul Nath ,Union Government ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்த கிராம...